×
 

நாதக நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்... ஆட்சி மாறியுமா?.. சீமான் கொந்தளிப்பு..!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது என தெரிவித்தார். கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார் என்றும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரந்தூர் சர்ச்சை..! என்ன இரட்டை வேடமா..? தவெக அரசை குறிவைத்த சீமான்!

 கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

 

இதையும் படிங்க: "கருத்து வேறுபாடுகளுடன் தொடர முடியாது"... சீமானுக்கு கடிதம் எழுதி விலகிய மு.களஞ்சியம்! நாதகவில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share