நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!
மதுரைக்கு வருகை தந்துள்ள அமித்ஷாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர்.
மதுரையில் மாநில நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்துள்ளார். நேற்று இரவு 11 மணி அளவில் அமித் ஷா மதுரை வந்தடைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரையில் தங்கியுள்ள அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அண்ணாமலையும் அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருத்து கூறி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: தூங்கா நகரில் அமித்ஷா.. பிரம்மாண்ட மேடைகள்.. தடபுடல் ஏற்பாடுகள்!
மேலும், சமூக வலைத்தளத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக அமித்ஷாவை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!