×
 

பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

பெண்களின் பாதுகாப்பை கயவர்கள் களவாடுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் அதிகரித்து இருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் போதைப் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளால் நேர்ந்த துயரம் என்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர் ஆட்சி முடியும் தருவாயில் கூட மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பைக் கயவர்கள் களவாடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது என்றார். அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களைக் காப்பதற்காக சீருடையணிந்த காவலர்களே குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: “நொண்டி, டுபுக்கு”... அடங்காத சிவாஜி கிருஷ்ணமூர்த்தி... மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு....!

அடாவடித்தனம் செய்யும் திமுகவின் உடன்பிறப்புகள், கஞ்சா போதையில் திரியும் இளைஞர்கள், குடிபோதையில் தங்களையே மறந்த காவலர்கள் எனப் பெண்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கயவர்களைத் தனது நிர்வாகத் திறனின்மையால் வளர்த்துவிடும் போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை என்றும் கூறினார். 

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்... வெயில், மழை பாக்காம உழைப்பாங்க... மேயர் பிரியா பேச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share