×
 

கால்கடுக்க நிக்க வெச்சு ஏமாத்துன பாவம் சும்மா விடுமா? முதல்வரை பந்தாடிய நயினார்...!

ஏமாற்றும் மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமின் கீழ் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுள் 49 ஆயிரத்து 429 கோரிக்கை மனுக்களில், 19 ஆயிரத்து 290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த இரண்டு நாட்களுக்குள்ளேயே தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியற்றவர்கள் என்ற போர்வையில், சுமார் 40 சதவீதம் மனுக்களை நிராகரித்து, நாலாப்புறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத் தொகையா என முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். 

ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பேற்று 28 மாதங்களுக்கு இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது போதாதென்று, தங்கள் கணக்குப்படி தகுதியான மகளிர் ஒவ்வொருவருக்கும் 28,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியது போதாதென்று, நாள்தோறும் மனு கொடுக்க கால்கடுக்க நிற்கவைத்து அலைக்கழித்தது போதாதென்று, மேடைதோறும் ஒரு போலி அறிவிப்பை வேறு வெளியிட்டு வஞ்சிப்பது ஏன் என்று நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரக்கமற்ற முதல்வர்! அந்த சார் கொடுத்த தைரியமா? பாலியல் வன்முறை குறித்து நயினார் விளாசல்...!

எளியோரை ஏமாற்றி களித்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் சாடியுள்ளார். மேலும், வெற்று அறிவிப்புகள் மூலம், தமிழக மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இது பாலியல் மாடல் ஆட்சி… வாயை திறங்க ஸ்டாலின்..! வாட்டி எடுத்த நயினார் நாகேந்திரன்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share