விவசாயிகள் கண்ணீருக்கு திமுக அரசே பொறுப்பு... இதென்ன முதல்வரே? விளாசிய நயினார்...!
விவசாயிகளின் கண்ணீருக்கு திமுக அரசை பொறுப்பு என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்குவதற்கு திமுக அரசின் அலட்சிய போக்கை காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். தற்போது திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அறிவாலயம் ஆட்சியில் தொடர்ச்சியாக மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அருகே உள்ள பூவாலை மேற்கு கிராமத்தில், கனமழையின் காரணமாக சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பது பெருங்கவலை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான பரவனாறு அருவாமுக்குத் திட்டத்தை நான்காண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு சமீபத்தில் அப்பணிகளைத் தொடங்கிய திமுக அரசு, ஆறுகளை முழுமையாகத் தூர் வாராமலும், தடுப்புச் சுவர் கட்டாமலும் இழுத்தடிப்பதே மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்று தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நெற்பயிர்களை வெள்ளத்திலும் விவசாயிகளைக் கண்ணீரிலும் மூழ்கவிடும் திமுக அரசே இந்தப் பேரழிவிற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அவருக்கு அனுமதி குடுக்காதீங்க... விஜய் ரோடு ஷோ நடத்துவதை எதிர்த்து டிஜிபியிடம் மனு...!
தேர்தல் நெருங்கும் சமயத்தில் நானும் டெல்டாகாரன்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றுப் பெருமை பேசி வருவதாக விமர்சித்து உள்ளார். விவசாயப் பெருமக்களை ஏமாற்றாமல், சேதமடைந்த நெற்பயிர்களை உடனடியாக ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் ரவியை அடக்கணும்..! நிதியில் தமிழ்நாட்டுக்கு பட்டை, நாமம் தான்… முதல்வர் ஸ்டாலின் அனல் பேச்சு…!