×
 

"தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய் என்று கோவை சிறுமி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம் என்று கூறியுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே என்று கேள்வி எழுப்பினார். மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே என்றும் கூறினார்.

தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே எனவும் தெரிவித்தார். குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு என்றும் காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை எனவும் நயினார் கூறினார்.

இதையும் படிங்க: பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!

எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதுடன் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share