"அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!
காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததற்கு பழிவாங்கும் வகையில், திமுக பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து உதவி ஆய்வாளரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காவல்துறையின் மாண்புக்கு எதிரான செயலாகவும், சட்ட ஒழுங்குக்கு சவாலாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி நடைபெறுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்ததற்காக, காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கத்தை, திமுக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து கொடூரமாகத் தாக்கி அவரது கையை உடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே காவல் நிலையத்திலேயே காவல்துறைக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த அவல நிலையே, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்று என்று நயினார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திவாலாகிறதா ஆவின்.? என்னென்ன முறைகேடுகள்.? வெள்ளை அறிக்கை வேண்டும்..! நயினார் வலியுறுத்தல்.!
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் இருக்க முதல்வர் முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நலத்திட்ட உதவியில் ரேஷன் அரிசி..! வெட்கக்கேடு..! விளாசிய நயினார்..!!