முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!
நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு வெளியீட்டு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் குறிப்பிட்டுப் பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததைக் கிண்டல் செய்யும் வகையில் சட்டமன்றத்தில் “அப்பா எங்கே” என்று விஜய் கேட்டிருந்தார். இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்தார். “சட்டமன்றத்தில் சென்று அப்பாவைத் தேடுகிறார். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று தெரியும். சட்டமன்றத்தில் தேடினால் எப்படிக் கிடைப்பார்” என்றார் அவர். இந்த வார்த்தைகள் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றார்.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அருவருப்பு..! BJP - DMK நட்பு வெளி வந்தாச்சு..! நயினார் பேச்சால் கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்..!!
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல என்று கூறினார்.
இதையும் படிங்க: நயினார் மீது CRIMINAL ACTION எடுக்கணும்..! DGP-க்கு சென்ற புகார்...! வெடிக்கும் பிரச்சனை..!!