×
 

சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!

சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பிரபாகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றமே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும், தனது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியமானது என்பதையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது என கூறினார்.

இத்தகைய சூழலில், 'கருக்கலைப்பு ஒரு கொலை' என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில் சபாநாயகர் பிரபாகர் பங்கேற்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுவதற்குச் சமம் என கூறியுள்ளார்.

சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராகவும், சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் ஆனால், ஏற்கனவே சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைப் போதித்து, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கடும் விமர்சனத்திற்குள்ளான ஜே.சி.டி பிரபாகர் அவர்கள், தற்போது மீண்டும் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பைக் குலைப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! கைதான அன்வர்தீன் உயிரிழப்பு... சந்தேகத்தை கிளப்பிய நயினார்..!!

மத அடையாளத்திற்காகப் பெண்களின் உரிமைகளுடன் விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நவீன சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் நாட்டின் சட்டத்தை விடத் தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சபாநாயகரின் செயல், தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனை மற்றும் சமூக நீதிப் பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால் எனவும் தெரிவித்தார். சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை என்றார். 

இதையும் படிங்க: காலி பாத்திரம் சத்தம் போடுவது போல் உள்ளது! பட்ஜெட்டை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share