×
 

உங்க கனவை சொல்லுங்க... நான் சொல்லட்டுமா முதல்வரே? நயினார் போட்ட லிஸ்ட்..!

உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பாடியநல்லூரில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்தார். “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டம், மக்களின் எதிர்கால ஆசைகளையும் தேவைகளையும் நேரடியாக அறிந்து கொள்ளும் ஒரு மகத்தான முயற்சியாக உருவெடுத்தது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் வளர்ச்சியடைந்த, மக்கள் நலன் சார்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. 

நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சீரான சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம், திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம் வேண்டும் என கேட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம், அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம், விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம், கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு வேண்டும் என கூறினார். 

இதையும் படிங்க: OUT OF CONTROL... இடைநிலை ஆசிரியர்கள் பேரணி... சேப்பாக்கம் ஸ்தம்பிப்பு.!

இந்துமத வெறுப்பில்லாத அரசு வேண்டும் என்றும் மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு எனவும் தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஆமாம் சாமி போட்டு தமிழ்நாட்டை அடகு வைத்த அதிமுக... விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share