360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது புகழை கூறி வருகின்றனர். மக்களின் பேராதரவுடன் தனியொரு பெண்ணாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை 360 டிகிரியிலும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டவர் ஜெயலலிதா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
'அம்மா' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு சைக்கில் முதல் லேப்டாப் வரை பல்வேறு பொருட்கள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் என அம்மா ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம் என்று கூறினார். காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சம்பவம் லோடிங்...!! - இன்று மாலை அதிரப்போகும் தமிழக அரசியல் களம்... நயினார் அதிரடி அறிவிப்பு...!
அத்தகைய புகழ்மிக்க தமது ஆட்சியில் போக்குவரத்துத்துறை, ஊரகத்தொழில்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை என்ற நான்கு முக்கியத் துறைகளின் அமைச்சராக என்னைப் பொறுப்பேற்கச் செய்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த புரட்சித்தலைவி அம்மாவை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அகமகிழ்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!