சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!
தான் சொர்ணபுரியில் இருப்பது போல ஒரு உணர்வு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெகிழ்ந்து பேசி உள்ளார்.
முருக பக்தர்கள் மாநாடு இன்று மதுரை மாவட்டம் அம்மா திடல், பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே தொடங்கி நடைபெற்று வருகிறது. முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, இந்து ஒற்றுமையையும், தமிழ் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் பறைசாற்று வேண்டும்., மேலும், காரைக்குடி முதல் பழநி வரையிலான பாதையை மேம்படுத்தவும், திருச்செந்தூர் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்கவும் கோரிக்கை வைப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முருகன் என்ற சொல்லுக்கு அர்த்தம் கூறினார். தமிழ்நாட்டில் நமக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ நீதிமன்றத்தில் நமக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். நமது கலாச்சாரம் ஒருமித்த கலாச்சாரம்., அது மாறிவிடக்கூடாது என்பதற்காக முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது என கூறினார்.
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. புதுப்புது விளம்பரம் போதுமா.. கல்வித்துறை நாசமா போச்சு..! நயினார் பளிச்..!
சொர்ணபுரியில் இருப்பது போல ஒரு நினைப்பு., ஆன்மீகம் நிறைந்த மேடையாக இருக்கிறது என பேசினார். மேலும் மருதமலை முருகன் பாடலை பாடி தனது உரையை நயினார் நாகேந்திரன் நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: ஐயா சேகர்பாபு அந்த 400 கோடிக்கு கணக்கு சொல்லுப்பா… பொன். ராதா சரமாரி கேள்வி!