×
 

தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் எச்சில் இலைகளை அள்ளிய சம்பவத்தை நயினார் கண்டித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் அலுவலகத் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியினருக்கு உணவு பரிமாறப்பட்ட பின்னர், எச்சில் இலைகளை அகற்றும் பணிக்கு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர்களின் மானத்தையும் சுயமரியாதையையும் காலில் போட்டு மிதித்த செயல் எனக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தச் சம்பவத்திற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலைகளை அள்ள தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் தவெக எம்எல்ஏ அலுவலகத் திறப்பு விழாவின் போது, அங்குள்ள தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது என்று தெரிவித்தார். நம் சமூகத்தைச் சுத்தமாக வைத்திருக்க அரும்பாடுபடும் தூய்மைப் பணியாளர்களின் கண்ணியத்தை காலில் போட்டு மிதிக்கும் இந்தச் செயலைத் தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நானே அரசு பள்ளி மாணவி தான்..! கிண்டல் பண்றது EASY..! ஆனால்... அமைச்சர் கீர்த்தனா பதிலடி..!!

தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தியவர்கள் மீது முதல்வர் விஜய் தயக்கமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தொடராத வண்ணம், தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையையும் உரிமைகளையும் பாதுகாக்க தவெக அரசு உறுதியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share