S.G. சூர்யா மீது போலி வழக்கு...! குண்டர் படையை பார்த்து பாஜக அஞ்சாது... நயினார் உறுதி..!
குண்டர் படையையும் போலி வழக்குகளையும் கண்டு பாஜக அஞ்சாவது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன், தனியார் தொலைக்காட்சி விவாத மேடையில் எதிர் கருத்துகளை முன்வைத்ததற்கு தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் எஸ் ஜி சூர்யா மீது திமுக தாக்குதல் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாகக் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையையே பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம் என்று கூறி இருந்தார். இதனிடையே, நேற்று தமிழக பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினரான லால் பிரசாத் நாயுடுவை கைது செய்ததோடு, தற்போது G1 வேப்பேரி காவல் நிலையத்தில் SG சூர்யா அவர்கள் மீது போலி வழக்குகளைப் பதிந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரை முடக்கி, தனது தவறுகளை மறைக்கும் குறிக்கோளுடன் ரௌடிகள் முதல் தங்கள் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறை வரை அனைத்து அஸ்திரங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது மக்கள் விரோத திமுக அரசு என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: "எங்க கூட்டணிக்கு எடப்பாடி தான் பாஸ்!" கூட்டணித் தலைவர் இ.பி.எஸ் தான்; நயினார் ஓப்பன் டாக்!
உலகத் தலைவர்கள் வரிசையில் மிக உயரிய நிலையில் இருக்கக் கூடிய பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினரைக் கண்டிக்காமல், இதுபோன்று ஜனநாயகப் படுகொலை செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் அறவழியில் போராடி மக்கள் சக்தி எனும் பெருந்துணை கொண்டு தமிழக பாஜகவின் தாமரைப் படை இந்த பாசிச திமுக அரசை வீழ்த்தியே தீரும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: "யார் யாருக்கு எத்தனை சீட்?" அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு.. இன்று தொடங்குகிறது முதற்கட்ட பேச்சுவார்த்தை!