×
 

நெல்லையில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு... +1 மாணவன் வெறிச்செயல்..!! தீவிர விசாரணை..!

நெல்லையில் 16 வயது சிறுவனை பதினோராம் வகுப்பு மாணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் 11 வகுப்பு மாணவன் ஒருவர் சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கிடையேயான வன்முறை சம்பவங்கள், குறிப்பாக அரிவாள் வெட்டு போன்ற கொடூரமான தாக்குதல்கள், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் ஒரு கவலைக்குரிய போக்காக உருவெடுத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் பள்ளி வளாகங்களுக்குள் நடப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் வகுப்பறைக்குள்ளேயே நிகழ்வது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தையே அதிர்ச்சியடையச் செய்கிறது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன. உதாரணமாக, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்சில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான சிறிய தகராறு முன்விரோதமாக மாறி, வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே அரிவாள் கொண்டு தாக்குதல் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு தலை, தோள், கை போன்ற பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமான சச்சரவுகள் எவ்வளவு வேகமாக ஆபத்தான வடிவம் எடுக்கின்றன என்பதை காட்டுகின்றன.

இதையும் படிங்க: நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவனை பிளஸ் ஒன் மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுவன் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் அந்த சிறுவனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 11-ம் வகுப்பு மாணவன் வீட்டில் இருந்த அரிவாள் எடுத்து வந்து சிறுவனை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: விஜயின் அடுத்தகட்ட நகர்வு... நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..! முக்கிய தகவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share