×
 

காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் நண்பர்களா என பல்வேறு கோணத்தில் திசையன்விளை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் ஆத்தங்கரை பள்ளிவாசல் காட்டுப்பாதையில், ஹூண்டாய் i 20 கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்த நிலையில் 4 உடல்கள் மீட்கப்பட்டது.  இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்று காலை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து பெட்டை குளம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு சொகுசு கார் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாக திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் காரினுள் எரிந்த நிலையில் நான்கு சகலத்தை கைப்பற்றி தடவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் நண்பர்களா என பல்வேறு கோணத்தில் திசையன்விளை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 

இதையும் படிங்க: #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

சம்பவ இடத்தில் போலீசார் காரின் சேஸ் (Chassis) எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில், அது சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரைச்தைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இவரது மனைவி பெயர் செய்யது நஸ்ரின் பாத்திமா என்பதும் தெரியவந்தது. முகமது ரபி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தனது வீட்டை கடன் பிரச்சனை காரணமாக  விற்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று ஆத்தங்கரை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், முகமது ரஃபி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன்  இதே காரில் வந்து கலந்து கொண்டது அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த மூன்று தினங்களாகவே இந்த பகுதிகளில் கார் சுற்றி வந்ததற்கான சிசிடிவியும் பதிவாகியுள்ளது. எனவே இறந்தவர்கள் முகமது ரபியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கடன் பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்.. பரிசு விநியோகத்தை தடுக்க மும்முரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share