×
 

6 ஆண்டு காதல்.. இணைந்த மெக்சிகோ-இந்தியா.. சொந்த ஊரில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண வரவேற்பு வைபவம்..

மெக்சிகோவில் மலர்ந்த காதல் கடல் கடந்து இந்தியா வரை பயணித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த பகவதி - அம்மா பொண்ணு தம்பதியின் மகன் இசக்கிமுத்து(34). இவர் வெளிநாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஐடியில் பணிபுரிந்து வருகிறார்.

மெக்சிகோவில் பணிபுரிந்து வரும் இசக்கிமுத்து தான் தங்கியிருந்த குடியிருப்பில் வசித்து வரும் அந்நாட்டைச் சேர்ந்த அசுவாணி லோபெஸ்(32) என்ற பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக உயிருக்கு உயிராய் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அசிவாணி லோபெஸ் மெக்சிகோ நாட்டில் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இசக்கிமுத்து தனது காதலை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்

வெளிநாட்டு மருமகள் என்பதால் முதலில் தயக்கம் காட்டிய இசக்கிமுத்துவின் பெற்றோர், பிறகு தனது மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து மெக்சிகோவில் ஏற்கனவே இருவருக்கும் திருமண நடைபெற்ற்றுள்ளது. 

இதையடுத்து, தனது கணவரின் விருப்பப்படி அவரது சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமணம் வரவேற்பு விழா வைபவம் செய்து கொள்ள அசுவாணி சம்மதித்துள்ளார்.
அதன்படி கல்யாணம் முடிந்த கையோடு தம்பதிகள் இந்தியா திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று இசக்கிமுத்துவின் சொந்த ஊரான பாபநாசத்தில் இந்து முறைப்படி இருவருக்கும் திருமண வரவேற்பு வைபவம் நடைபெற்றது. இதில் இசக்கி முத்துவின் உறவினர்கள் மற்றும் மணப்பெண் சார்பில் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து பாபநாசத்தில் உள்ள  தனியார் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மெக்சிகோவில் மலர்ந்த காதல் கடல் கடந்து இந்தியா வரை பயணித்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, மகளுடன் கைது: இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share