கூகுள் பே மூலம் லஞ்சம்... வசமாக சிக்கிய முக்கிய துறை அதிகாரிகள்... நடந்தது என்ன?
நெல்லையில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை: கணக்கில் வராத ரூ.92,430 பறிமுதல்
சார் பதிவாளர் அலுவலகத்தில் கூகுள் பே மூலம் பணம் பெற்றது அம்பலமானதை அடுத்து ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதற்காக வரும் மக்களிடம் அதிகப்படியாக பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால்
தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர்.
தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் நேற்று மாலை களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் இதுவரை ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நெல்லையிலும் பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திலும், விக்ரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நேற்று நடைபெற்றது.
இதையும் படிங்க: பாட்டுக்கே பயமா..? பாடகர் சங்கீத்சன் கைது..! வறுத்தெடுத்த சீமான்..!!
இதில் பாளையங்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.50,360 ரூபாயும், விக்கிரமசிங்கபுரத்தில் 42,070 பணம் என மொத்தம் கணக்கில் வராத 92,430 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது.
அதிலும் குறிப்பாக விக்ரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலரிடம் இருந்து 6000 ரூபாய் நேரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. 2 புரோக்கர்களிடமும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்ற ஒரு பெண்ணின் கூகுள் பே-யை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பார்த்தனர்.
அப்பொழுது அந்த வங்கி கணக்கிற்கு அதிக அளவில் பணம் வந்துள்ளது கண்டறியப்பட்டது. அதையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வின்போது நேற்று பிடிபட்ட பணம் குறித்து அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதற்கு நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!