உள்வாங்கிய கடல்.. கண்டெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு.. திருச்செந்துரில் சுவாரசியம்..!
திருச்செந்தூர் கடல் மீண்டும் உள்வாங்கிய நிலையில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். குறிப்பாக, திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கோயில் முன்புள்ள கடற்கரையில், கடல் அவ்வப்போது உள்வாங்கிக் காணப்படுகிறது. அப்படி கடல் உள்வாங்கும் சமயங்களில், கடலுக்குள் கிடக்கும் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாத காலத்திற்குள் சத்திய தீர்த்தம், முனி தீர்த்தம், மாதர் தீர்த்தம், பிதா தீர்த்தம் என பல்வேறு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் களைகட்டிய மாசி திருவிழா.. வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்!
இந்த நிலையில், நேற்று கடல் மேலும் உள்வாங்கியுள்ள நிலையில் பச்சை பாசி படிந்த பாறைகள் அருகே மற்றொரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டில் 'கந்த மாதன தீர்த்தம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு 'பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பச்சை படிந்த பாறையைப் பார்த்து அதன் அருகே நின்று ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: பிரபல பேட்மேன் நடிகர் வால் கில்மர் மறைவு..! நிமோனியாவால் உயிரிழந்த சோகம்..!