×
 

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் யார் எல்லாம் உடந்தை? ஞானசேகரன் தரப்பு வக்கீல் சொல்வது என்ன?

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் ஜி.பி. கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த விதத்திலும் கருணை காட்டக்கூடாது; இது அரிதிலும் அரிதான வழக்கு; எனவே அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தியதாக வக்கீல் மேரி ஜெயந்தி வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் ஞானசேகரன் கோர்ட்டில் குறைந்த பட்ச தண்டனை கோரி உள்ளார். வீட்டில் வயதான தாய் இருக்கிறார்.

இதையும் படிங்க: ஞானசேகரன் வழக்கில் கோர்ட்டில் நடந்தது இதுதான்.. அரசு தரப்பு வக்கீல் அளித்த புதிய தகவல்கள்..

அவருக்கு உடல் நலமும் சரி இல்லை. 8ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரினார். தனது வங்கி கணக்கை முடக்கி இருப்பதால் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும்ஞானசேகரன் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் கோதண்டராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த வழக்கில் 28 சாட்சிகளை விசாரணை செய்து சாட்சிகள் அனைத்தையும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு எதிர்வாதம் எல்லாம் முடிந்து இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எதிரி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டதாகக் கூறி அவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தண்டனை விபரங்களை திங்கட்கிழமை ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் சொல்லியுள்ளது. தண்டனை விவரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்போம். மேல்முறையீடு போவது குறித்து முடிவெடுக்கப்படும். ஞானசேகருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தளவில் ஞானசேகர் மட்டும் தான் குற்றவாளி என காட்டப்பட்டுள்ளது. வேறு யாரேனும் குற்றவாளி இருக்கிறாரா என்பதை போலீஸ் தரப்போ அல்லது நீதிமன்றமோ சுட்டிக்காட்டவில்லை. நீதிமன்றத்தால் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறு என்ன இருக்கும் என்பதை பார்த்து மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என யோசிப்போம்! அரசு எங்களுக்கு இதைச் சொல்லி உள்ளது. நீதிமன்றம் சொல்லி உள்ளதால் நாங்கள் இதை தலையாய கடமையாக எடுத்துக் கொண்டு நேர்மையாக நடத்தி உள்ளோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஞானசேகரன் வழக்கில் கோர்ட்டில் நடந்தது இதுதான்.. அரசு தரப்பு வக்கீல் அளித்த புதிய தகவல்கள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share