×
 

கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!

கொளத்தூரில் திமுக கூறிய வாக்கு இயந்திர புகார்கள் நிரூபிக்கப்படவில்லை எனத் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாக திமுகவினர் கூறிய புகார்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை என்றும், அங்கு எவ்விதத் தவறும் நடைபெறவில்லை என்றும் கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொளத்தூர் தொகுதியில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாக திமுக தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. தேர்தல் ஆணையம் மிகவும் அருமையாகவும், நேர்மையாகவும், விதமுறைகளின்படியும் தேர்தலை நடத்தி முடித்துள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

மேலும், எந்தவிதமான புகார்கள் அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளாக இருந்தாலும் அதனைச் சந்திக்கத் தவெக தயாராக உள்ளது. பொய்யான புகார்களைக் கூறித் தேர்தலின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது" என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share