×
 

தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நொச்சிக்குப்பம் மீனவர்கள் சென்னை நகரின் இதயபகுதியில், மெரினா கடற்கரை அருகே வாழும் ஒரு பாரம்பரிய மீனவ சமூகம். இவர்கள் சென்னையின் பூர்வகுடிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வரலாற்று ரீதியாக, 1639-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சென்னைக்கு வரும் முன்பே இப்பகுதியில் மீனவர்கள் வாழ்ந்து வந்ததாக பதிவுகள் கூறுகின்றன. நொச்சி என்ற செடியின் பெயரால் அழைக்கப்படும் இந்தக் குப்பம், காலங்காலமாகக் கடலோடு இணைந்த வாழ்க்கையை நடத்தி வருகிறது.

இங்கு வசிக்கும் மீனவர்கள் பெரும்பாலும் சிறிய படகுகள் மற்றும் பாரம்பரிய முறைகளில் மீன் பிடிக்கின்றனர். கரைவலை முறை போன்றவை இவர்களின் முக்கிய வேலைத்திட்டங்கள். ஆண்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க, பெண்கள் கரையில் விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். நொச்சிக்குப்பம் மீன் சந்தை, லூப் சாலையோரம் 2.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியிருந்தது. இங்கு புதிய மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகைகள் காலையிலிருந்து விற்கப்படும். 

இந்தச் சந்தை உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல், நகரின் பல பகுதிகளிலிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கும் பிரபலமான இடமாக இருந்தது. பெண்கள் இங்கு தங்கள் குடும்பத்தின் முக்கிய வருமானத்தை ஈட்டினர். சிலர் காசிமேடு துறைமுகத்திலிருந்து மீன் வாங்கி விற்பனை செய்யும் அளவுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இந்த நிலையில், சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கடற்கரை மணற்பரப்பில் மீன் கடைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்ட விற்பனை அங்காடி வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஏராளமான மீனவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை மாநகராட்சிக்கு முக்கிய கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். மீனவர்களுக்கு எதிரான நீலக் கொடி கடற்கரை திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் நொச்சிக்குப்பம் கடற்கரையில் தங்கள் பூர்வீக நிலத்தில் மீன் வியாபாரம் செய்ய தடுக்க வேண்டாம் என்றும் கைகளில் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர். 

இதையும் படிங்க: என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share