×
 

இன்னும் எத்தன உயிர பலிவாங்க போகுதோ திமுக..! நாங்குநேரி கொடூரத்திற்கு சீமான் கண்டனம்..!

நெல்லை இரட்டை கொலை சம்பவத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்து உள்ளார்.

நாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த துயர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர். கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.

இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாகவும் மனவேதனையை கொடுப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் புழக்கத்தால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது என்றும் போதைக்கும்பலின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் வடமாநிலத் தொழிலாளர் இருவரின் குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்தார். 

இதையும் படிங்க: தி கேரளா ஸ்டோரி 2 ..! தடை பண்ணலனா அவ்ளோ தான்.. சீமான் எச்சரிக்கை..!!

இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் போதையிலிருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய சீமான், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள இக்கொடூர குற்றத்திற்கு மூல காரணம் என்றார். கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதன் காரணமாக நடைபெறும் கொடூர படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியம் மீதமிருக்கும் நாட்களில் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப்போகிறதோ என்று மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போய் இருப்பதாக கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: மனசு வலிக்குது... தேசம் கண்டிராத உயரிய மனிதர்... வேதனையை வெளிப்படுத்திய சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share