கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!
சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகள் இல்லாத நிலை தான் உள்ளது என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் போட்டியிடுகிறார். இவர் தனது சொந்த தொகுதியில் போட்டியிடுவதால், நகர பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்த தங்கி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வித்யா வீரப்பன் தனது சொந்தங்களோடு, மேட்டூர் அணைகட்டு முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, கிடை வெட்டி வழிபட்டார். அதனை தொடர்ந்து சுமார் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு வந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மக்களுக்கு குரல் கொடுக்க எம்எல்ஏ தேர்தலில் போட்டியுள்ளதால் எல்லா தெய்வகளுக்கும் பூஜை செய்துள்ளேன் என கூறினார். கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகள் இல்லாத நிலை தான் உள்ளது. காவிரி ஆறு நீரை மேச்சேரி, கொளத்தூர் பகுதிக்கு நீர் வசதி, விவசாயிகள், பெண்ணுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வித்யா வீரப்பன் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!
இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லை, இதனை சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!