ஓணம் வந்தல்லோ!! விமான டிக்கெட் விர்ர்ர்ர்!! ரெயில், பஸ் Full! பயணிகளுக்கு அதிர்ச்சி!
கடைசி நேரத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள் வேறு வழியின்றி விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக விமான டிக்கெட் கட்டணத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் முக்கிய பாரம்பரிய பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் மலையாளி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தென் மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் போக்குவரத்து சேவைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மலையாளி மக்கள் கேரளாவுக்கு பயணம் செய்யத் தயாராகி வருகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் போன்ற கேரளாவின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் வேகமாக நிரம்பியுள்ளன.
கடைசி நேரத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள் வேறு வழியின்றி விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக விமான டிக்கெட் கட்டணத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!
சென்னை - கொச்சி வழித்தடத்தில் வழக்கமாக விமானக் கட்டணம் சராசரியாக ரூ.5,336 அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓணம் பண்டிகை பயண நெரிசல் காரணமாக தற்போது சில பயணத் தேதிகளில் கட்டணம் ரூ.14,843 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னை - திருவனந்தபுரம் வழித்தடத்தில் வழக்கமான கட்டணம் சுமார் ரூ.5,853 என்ற நிலையில், தற்போது அது ரூ.14,700 வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சில வழித்தடங்களில் விமானப் பயணக் கட்டணம் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதால், கட்டணம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியின்றி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பண்டிகைக் காலங்களில் பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி விமானக் கட்டணங்கள் அதிகமாக உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!