×
 

எந்த பெண்குட்டிகளே ரெடியோ..!! களைகட்டப்போகும் ஓணம் பண்டிகை.. கேரள அரசின் இலவச தொகுப்பு அறிவிப்பு..!!

செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி கேரள அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம், மலையாள மக்களின் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளமாக விளங்குகிறது. இப்பண்டிகை, மலையாள மாதமான சிங்கத்தில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

இது மகாபலி மன்னரின் ஆட்சியை நினைவுகூர்ந்து, வாமன அவதாரத்தில் திருமால் அவரை சந்தித்ததை குறிக்கும் புராணக் கதையுடன் தொடர்புடையது. ஓணம், வளம், செழிப்பு மற்றும் ஒற்றுமையின் சின்னமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பாக். உளவாளிக்கு 'RED CARPET' வரவேற்பு.. ஷாக் கொடுத்த கேரள அரசு.. யார் அந்த சர்ச்சை யூடியூபர்..?

ஓணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, வீடுகளின் முற்றத்தில் பூக்களால் அலங்கரிக்கப்படும் அழகிய பூக்கோலம். இது ஒவ்வொரு நாளும் புதிய வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. ஓணச் சத்யா எனப்படும் பாரம்பரிய விருந்து, வாழை இலையில் பலவகையான கேரள உணவு வகைகளுடன் பரிமாறப்படுகிறது. இதில் சாம்பார், ரசம், அவியல், தோரன், பாயசம் போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன.

புலிக்களி (புலி நடனம்), வல்லம் களி (படகுப் போட்டி), மற்றும் கைக்கோட்டிகளி, திருவாதிரைகளி போன்ற பாரம்பரிய நடனங்கள் ஓணத்தை உற்சாகமாக்குகின்றன. கேரளாவின் புகழ்பெற்ற வல்லம் களி, ஆலப்புழாவில் நடைபெறும் பிரமாண்ட படகுப் போட்டியாகும், இது உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

ஓணம், குடும்பங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நேரமாகும். புதிய உடைகள் அணிந்து, பரிசுகள் பகிர்ந்து, பாரம்பரியத்தைப் போற்றும் இவ்விழா, கேரளாவின் கலாச்சார செழுமையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம், செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒரு வார காலம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. வயநாடு பேரழிவு காரணமாக 2024-ல் அரசு சார்பிலான ஓணக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இம்முறை விமரிசையான கொண்டாட்டங்களுக்கு கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் ‘ஹரித ஓணம்’ என்ற கருப்பொருளில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கேரள அரசு மஞ்சள் ரேஷன் அட்டை கொண்ட 6 லட்சம் குடும்பங்களுக்கு 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தத் தொகுப்பு, ஓணப் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கும், இது மக்களின் பண்டிகை உணவு தயாரிப்பிற்கு உதவும்.

இதுதவிர ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும். நீல நிற கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும், வெள்ளை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 15 கிலோ அரிசியும் கிலோவுக்கு 10 ரூபாய் 90 பைசா விலையில் வழங்கப்படும். இதன் மூலம் 53 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.

96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ வீதம் கே-ரைஸ் எனப்படும் கேரள மாநில அரசு வழங்கும் அரிசி கிலோவுக்கு ரூ.25 விலையில் வழங்கப்பட உள்ளது. தற்போது இந்த அரிசி ஒரு கிலோ ரூ.29-க்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மாநிலத்தில் பல இடங்களிலும் ஓண சந்தைகள் திறந்து காய்கறிகள், பழங்கள், நேந்திரங்காய் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.

கேரள அரசின் இந்த முயற்சி, பண்டிகையின் மகிழ்ச்சியை அனைத்து தரப்பு மக்களும் பகிர்ந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, மேலும் சமூக ஊடகங்களில் இதுகுறித்து உற்சாகமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க: பாக். உளவாளிக்கு 'RED CARPET' வரவேற்பு.. ஷாக் கொடுத்த கேரள அரசு.. யார் அந்த சர்ச்சை யூடியூபர்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share