காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி... கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!
அரக்கோணத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை முதலீடு செய்து லாபம் கிடைக்கும் என நம்பி விளையாடுபவர்கள் பணத்தை இழப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. எனவே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற ஒருமித்த குரல் எழுந்தது
இந்த நிலையில் அரக்கோணத்தைச் சேர்ந்த 42 வயதான கல்லூரி பேராசிரியர் தினகரன் என்பவர் ஆன்லைன் ரம்மியில் முதலீடு செய்து விளையாடி உள்ளார். இதில் தனது 25 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் விரக்தி அடைந்த தினகரன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சித்தேரி பகுதியில் தினகரன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 2200 ஏக்கரிக்கு தீயாய் நடக்கும் வேலை - குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரம்..!
இதையும் படிங்க: இபிஎஸ் தலைமையில் கூடியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! ராஜ்ய சபா வேட்பாளர்கள் முன்மொழிவு..!