×
 

ஊட்டிக்கே இந்த நிலைமையா? 24 ஆண்டுகளுக்கு பின் கொளுத்தும் வெயில்! 29 டிகிரியாக எகிறியது வெப்பநிலை!

ஊட்டியில் நேற்று 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.

ஊட்டியில் வெயில் அனல் பறக்கிறது! மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி நகரம், இப்போது சமவெளி போல் கொதிக்கிறது. இதமான குளிர்ச்சியை எதிர்பார்த்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாகக் கருதப்படுகிறது. பகல் நேரங்களில் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருந்தாலும், மாலை மற்றும் இரவில் 14 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சி நிலவுகிறது.

கோடை சீசனுக்காக தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் இந்த வெப்பத்தால் வாடும் அபாயத்தில் உள்ளன. மலர்க்காட்சிகள் மற்றும் சுற்றுலா தொழில் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஊட்டியின் இயற்கை குளிர்ச்சி இழக்கப்படுவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எது பழைய திமுக?! மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்தீர்களே அதுவா? பயத்தில் உளறும் ஸ்டாலின்?!! இபிஎஸ் விமர்சனம்!

இதற்கிடையே தமிழகத்தில் வெயில் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு, கோவை உள்பட 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை (சுமார் 37.8 டிகிரி செல்சியஸ்) தாண்டியுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் வரும் 20ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 18ஆம் தேதி வரை உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று கரூர் பரமத்திவேலூரில் 105.44 டிகிரி பாரன்ஹீட், வேலூர் 104.36, தருமபுரி 103.1, ஈரோடு, சேலம், மதுரை விமான நிலையம் 102.2, கோவை 101.84 டிகிரி வரை வெப்பம் பதிவானது. 

ஊட்டியின் வெப்ப உயர்வுக்கு மரங்கள் வெட்டப்படுவது, கட்டுப்பாடற்ற கட்டிட வளர்ச்சி, வாகனங்கள் அதிகரிப்பு, கோடை மழை குறைவு மற்றும் எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணமாகச் சொல்லப்படுகின்றன. 

வானியல் நிபுணர்கள், மரங்களைப் பாதுகாக்கவும், கட்டிடங்களைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பேணவும் உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் ஊட்டியின் புகழ்பெற்ற குளுகுளு காலநிலை முழுவதும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share