ஜெ. கேட்டதும் பதவியை திருப்பிக் கொடுத்தேன்... அதிமுகவுக்கு சோதனை காலம்... OPS பிரஸ் மீட்..!!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு வருவதாக ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
சிறைக்கு சென்ற போது கூட ஜெயலலிதா தன்னையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார் என்றும், அவர் கேட்டதும் பதவியை தான் ஒப்படைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரை 'அம்மா' என்று அன்போடு அழைத்து போற்றிய மக்களும், அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இந்த நாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக தன் பொறுப்பேற்றதாகவும் கூறியுள்ளார். சிறை சென்றபோதும் ஜெயலலிதா தன்னையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!
மேலும் ஜெயலலிதா இல்லாத போது தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என்றும் ஆறு மாத காலம் முதலமைச்சராக இருந்தபோது, ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்ததாகவும், மூன்றாவது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில் தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற அணி என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!