தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! 12 மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்!
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த டிசம்பர் 23-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது, கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் ராமேசுவரம் மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று (டிசம்பர் 23) மாலை தங்கச்சிமடம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மறியலால், சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று (டிசம்பர் 23) மாலை தங்கச்சிமடம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மறியலால், சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது! படகும் பறிமுதல்!
இதற்கிடையில், ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களது படகையும் உடனே மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இலங்கை சிறையில் நீண்ட நாட்களாக தவிக்கும் அனைத்து மீனவர்களையும், அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் மீட்பது தொடர்பாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஜனவரி 13-ம் தேதி ராமேசுவரத்துக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மீனவர்கள் நேரில் சந்தித்து தங்களது பிரச்சினைகளை எடுத்துரைக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், இன்று (டிசம்பர் 24) ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வரும் நிலையில், இந்தப் போராட்டங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரையாண்டு விடுமுறை விட்டாச்சு! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!