×
 

ஒரே நேரத்தில் டபுள் பேரிடி... சில்லு சில்லாய் சிதறும் பாகிஸ்தான்... அடி மேல் அடி வாங்கும் ஷெரீப் அரசு...!

ஒருபுறம் பலுசிஸ்தான் மாகாணம் தனி நாடாக சுதந்திரம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பாகிஸ்தான் தற்போது தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து அரசியல் செய்து வந்த பாகிஸ்தானுக்கு, இன்று அதன் சொந்த நாட்டுக்குள்ளேயே மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது.

ஒருபுறம் பலுசிஸ்தான் மாகாணம் தனி நாடாக சுதந்திரம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு திசைகளில் இருந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அரசு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை ஒடுக்க முயன்ற பாகிஸ்தான் அரசு, அந்தப் பகுதிக்கு செல்லும் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கை, மக்களின் எதிர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்! செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

போராட்டத்தை முன்னெடுத்து வரும் சர்தார் அமல் கான், "பிஓகே என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல; அது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு கோட்டை (Line of Control) நோக்கி பேரணியாக செல்ல மக்கள் தயாராகி வருவதால், இந்திய எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சிலர், காஷ்மீர் உண்மையில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி வரும் கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

இதற்கிடையில், இயற்கை வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணமும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. "பலுசிஸ்தான் தற்போது ஒரு சுதந்திர நாடு. பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை" என்று பலூச் அரசியல் செயற்பாட்டாளர் மிர் யார் பலோச் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிராகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலூச் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பலுசிஸ்தான் தனது சொந்த தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் 'பலூச்சி ஃபலூஸ்' என்ற புதிய நாணயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

பாகிஸ்தானின் பரப்பளவில் மிகப்பெரிய பகுதியான பலுசிஸ்தான் பிரிந்து சென்றால், அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. பலூச் மக்களின் இந்த எழுச்சி, பாகிஸ்தான் என்ற நாடு சிதைவடையும் நிலைக்கான தொடக்கமாக சிலரால் பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக தீவிரவாத அமைப்புகளை ஆதரித்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், இன்று தனது சொந்த பகுதிகளையே முழுமையாக பாதுகாக்க முடியாத சூழலில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் சில போராட்டங்களில், இந்தியாவின் உதவியை நாடும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச அரங்கில் மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் மற்றும் உள்நாட்டு சூழ்நிலையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அடக்குமுறையை மட்டுமே ஆட்சியின் கருவியாக பயன்படுத்தியதன் விளைவாகவே இத்தகைய நெருக்கடிகள் உருவாகியுள்ளன என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share