×
 

பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

பழனி நில மோசடி விவகாரத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 1.4 ஏக்கர் நிலம், தேவ பக்தர்கள் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படும் முக்கிய இடம். இந்த நிலம் மடத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு இரு தனியாருக்கு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நில மோசடி விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.இந்த மோசடியின் பின்னணியில் பல சிக்கல்கள் உள்ளன. 1888ஆம் ஆண்டு முதல் இந்த நிலம் கோவில் மடத்திற்கு அளிக்கப்பட்ட நன்கொடையாகக் கருதப்படுகிறது. பல நீதிமன்ற உத்தரவுகள், உரிமைப் பத்திர வரம்புகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் எதிர்ப்புகள் இருந்தும், மார்ச் மாதம் ஒரு முறை பதிவு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஜூலை 6ஆம் தேதி, கோடைக்கானல் சப்-ரெஜிஸ்ட்ரார் ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பில் இருந்தபோது, இந்த ஆவணம் பதிவு செய்யப்பட்டது. இதனால் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் FIR பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். CB-CID போன்ற உயர் மட்ட விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெளியானதும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தற்போதைய அரசு இந்த மோசடியை மறைக்க முயற்சிப்பதாகவும், உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டின.

இதையும் படிங்க: அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டோர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாகக் கூறினாலும், பிரச்சினை அரசியல் களத்தில் தீவிரமடைந்தது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், அதிமுக இந்த நில மோசடிக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. கோவில் நிலங்களைப் பாதுகாக்கவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, அதிமுகவின் மாவட்ட அளவிலான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோவில் நிலம் முறைகேடு வடக்கை சிபிஐ வாசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் வரும் 25ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் சிபிசிஐடி இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். நிலத்தை பத்திர பதிவு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நில மோசடி விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புவதாகவும் இதனை கண்டித்து பழனியில் வரும் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் அதிமுக... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share