×
 

700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி கொண்டுவரப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி ( நாளை) இம்மானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதேபோல் திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை சட்ட ஒழுங்கு ADGP அன்பு மற்றும் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் ஆறு டிஐஜிக்கள், 33 எஸ்பிக்கள் உட்பட 8 ஆயிரம் காவலர்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 938 பகுதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 44 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 67 இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 700 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மூலம்  கண்காணிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி நகர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share