×
 

கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

சிவகாசியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மேயருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாய் தனியார் நிறுவனங்களின் நிதி பங்களிப்போடு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் புனரமைக்கப்பட்டு   வரப்படுகிறது. கண் மாயை ஒட்டியுள்ள பகுதியில்   மாநகராட்சி பொதுக்கழிப்பறை கட்டப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காரணமாக கண்மாய் மாசுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த ஒதுக்களிப்பிடத்தை பொதுக் கழிப்பிடத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் இடித்தனர்.

பொது  மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி  இடித்து அகற்றப்பட்ட நிலையில், பொதுக்கழிப்பறை இடித்து அகற்றப்பட்டதை காரணம் காட்டி சிவகாசி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசோகன், மாநகராட்சி திமுக மேயர் சங்கீதா ஆகியோருக்கு எதிராக நகரம் முழுவதிலும்  சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

அந்த சுவரொட்டியில், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு பொது கழிப்பறையை இடித்து அகற்றுவதில் ஆர்வம் காட்டும் எம்.எல்.ஏ  அசோகன் , மேயர் சங்கீதா ஆகியோர் பொதுமக்களின் நலன் பாராமல் தொழிலதிபர்களின் கைக்கூலியாக செயல்பட்டு பொது கழிப்பறையை இடிக்க முயற்சி ஏன்? பாமர மக்கள் பயன்படுத்தும் பொதுகழிப்பறையை இடித்து  திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலையை ஏற்படுத்த சதியா ?

ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்து தன் சுய நலத்திற்காக பதவியை தற்காத்துகொள்ள நாடகமா! இவையனைத்திற்கும் துணை போகும் மாவட்ட நிர்வாகமே! தமிழக அரசே !! ஒன்றிய அரசே... நடவடிக்கை எடுஎன சுவரொட்டியில் அச்சிடப்பட்ட  வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
 

இதையும் படிங்க: தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share