×
 

பெரம்பூர் சூட்கேஸில் உடல்... செங்கல்பட்டில் தலை... தமிழகத்தையே உலுக்கிய கொலையில் வெளியான பகீர் உண்மை...!

இன்று மீண்டும் அவர்களை அழைத்துச் சென்று தேடுதல் பணியை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரஹீமா அளித்த வாக்குமூலத்தில், பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தாம் தங்கி இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகிலுள்ள கால்வாயில் உடலின் கை, கால்களை வெட்டி வீசியதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதேபோல், தலையில் வாசனை திரவியம் தடவி, ரயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையின் போது இடங்களை மாற்றி மாற்றிக் காட்டியதால், தலையை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மீண்டும் அவரை அழைத்துச் சென்று தேடுதல் பணியை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: முதல்வர் தொகுதியிலேயே இந்த நிலையா?... சூட்கேஸில் தலையில்லா சடலம் கண்டெடுக்கப்பட்டதில் திடுக்கிடும் திருப்பம்...!

நடந்தது என்ன? 

பெரம்பூர் சூட்கேஸ் வழக்கில், நேற்று மாலை முதல் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் அழைத்துச் சென்று, தலை மற்றும் கை, கால்கள் எங்கு வீசப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையின் போது, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக ரஹீமா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தாம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகிலுள்ள கால்வாயில் கை, கால்களை வெட்டி வீசியதாகவும், தலையை செங்கல்பட்டு அருகே ஒரு பாலத்தின் கீழ் மண்ணில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் அவர்களை செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் இடங்களை மாற்றி மாற்றிக் காட்டியதாலும் இரவு நேரமாகிவிட்டதாலும் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இன்று மீண்டும் அவர்களை அழைத்துச் சென்று தேடுதல் பணியை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், தலையில் வாசனை திரவியம் தடவி ரயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் வீசியதாகவும் கூறப்படுகிறது. வாடகை வாகன சேவையின் மூலம் வாகனத்தை முன்பதிவு செய்து, உடலை சூட்கேஸில் வைத்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் ரஹீமா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share