×
 

மனுஷனய்யா நீயெல்லாம்... குடிதண்ணீர் தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த நபரால் பரபரப்பு...!

வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நல்லமனார்கோட்டை ஊராட்சி, தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 அடி உயரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. தொட்டி முழுவதுமாக கட்டப்பட்டு விட்ட நிலையில் இன்னும், குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மேலே ஏறி, தொட்டிக்குள் இறங்கி உள்ளே மலம் கழித்து அசுத்தம் செய்துள்ளனர். மேலும் தொட்டிக்குள் மது அருந்திய  பிளாஸ்டிக் கப், பீடி புகையிலை உள்ளிட்ட பொருட்களும் கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அசுத்தத்தின் மீது ஊராட்சி நிர்வாகம் சார்பாக பிளீச்சிங் பவுடர் போடப்பட்டுள்ளது.

எனவே தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மூவேந்தர் புலிப்படை சார்பில் 
மனு. கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கீழடி விவகாரத்தில் இதுதான் அவங்க நோக்கம்... உண்மையை உடைத்த கனிமொழி!!

இதையும் படிங்க: “தாங்க முடியலப்பா”... 24 மணி நேரமும் பாலியல் தொல்லை... புதுப்பெண் தற்கொலையில் வெளியானது திடுக்கிடும் ஆடியோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share