×
 

விடிந்ததுமே தமிழகத்திற்கு பேரிடி... யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிரடி மாற்றம்...!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏற்ற இரக்கத்தை கண்டுவரும் நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய போர் சூழல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி என்பது வெகுவாக உலக நாடுகளிடம் சரிவை சந்தித்திருக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணை கிடைப்பதில தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல்கள் என்பது செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பார்த்தோம் என்றால் நேற்றைய தினம் சற்றே ஆறுதலாக 43 பைசா அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை என்பது குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை என்பது திருத்தி அமைக்கப்பட்டு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, சென்னையில பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கும், அதேபோல டீசல் விலை 23 காசுக்கள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

இதற்கு முன்னதாக மே 24ஆம் தேதி மற்றும் 21ம் ம் தேதி சற்றே பெட்ரோல் டீசல் விலையில மாறுதல்கள் என்பது செய்யப்பட்டு விலை என்பது குறைக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம்  43 காசுகள் என்ற அளவுக்கு விலை என்பது குறைக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் இன்றைய தினம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை என்பது உயர்வை சந்தித்திருக்கிறது.  சென்னை மட்டுமல்லாது மற்ற பிற முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் டீசல் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: சென்னை வர தயாராக இருந்த விமானத்தில் திடீர் புகை!! அலறியடித்து வெளியேறிய பயணிகளால் 2 பேர் காயம்!

கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த மே 19ம் தேதி பெட்ரோல் விலை 79 காசுகளும், டீசல் விலி 86 காசுகளும் உயர்த்தப்பட்டது. 4வது முறையாக கடந்த 23ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் உயர்த்தப்பட்டது. 5வது முறையாக மே 25ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 5 காசுகளும் உயர்த்தப்பட்டன. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 6வது முறையாக கடந்த 27ம் தேதி அன்று, பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகளும், டீசல் லிட்டருக்கு 32 காசுகளும் உயர்ந்தப்பட்டன. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share