மக்கள் பாக்கெட்டுக்கு மீண்டும் அடிதான்! எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்..!
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
மேற்காசியாவில், குறிப்பாக ஈரான் தொடர்பான போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடல் போன்ற சூழல்கள் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையை கடுமையாக பாதித்துள்ளன. இதன் விளைவாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, போர் தீவிரமடைந்த பிறகு கடும் உயர்வை சந்தித்துள்ளது.
இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடு மற்றும் தனது தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மேற்காசிய நாடுகளில் இருந்து வரும் இந்த இறக்குமதி ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. போர் சூழலால் இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டதால், விநியோகத் தடைகள் ஏற்பட்டு விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் என்பது போக்குவரத்து, சரக்கு ஏற்றுமதி, விவசாயம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் முக்கிய எரிபொருள். அதன் விலை உயர்ந்தால், பால், காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொண்டு செல்லும் செலவு அதிகரிக்கும். இது நேரடியாக சில்லறை விலையை பாதிக்கும்.
இதையும் படிங்க: உயருகிறதா பெட்ரோல், டீசல் விலை..?? வதந்திகளை நம்பாதீங்க..!! விளக்கம் அளித்த மத்திய அரசு..!!
ஏற்கெனவே உணவுப் பணவீக்கம் கவலையளிக்கும் அளவில் இருக்கும் நிலையில், இந்த உயர்வு பரவலான விலை உயர்வுக்கு வழிவகுக்கும். போக்குவரத்து செலவு அதிகரிப்பால் MSME தொழில்கள், கட்டுமானத் துறை மற்றும் விவசாயிகளின் உற்பத்திச் செலவும் உயரும். இறுதியில் சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: உயருகிறதா பெட்ரோல், டீசல் விலை..?? வதந்திகளை நம்பாதீங்க..!! விளக்கம் அளித்த மத்திய அரசு..!!