பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!
திருச்சியில் 11-ந் தேதி பொதுக்கூட்டம் இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பொதுக்கூட்டம் இம்மாதம் (மார்ச்) 1-ந் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து உயர் மட்டத்தில் பேச்சு நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விவாதித்தார்.
என்டிஏவின் முதல் பொதுக்கூட்டம் ஜனவரி 23-ல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இரண்டாவது கூட்டம் மார்ச் 1-ல் புதுச்சேரி மற்றும் மதுரையில் நடந்தது.
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!
மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். DMK ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், NDA ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் மார்ச் 11-ம் தேதி (புதன்கிழமை) திருச்சியில் என்டிஏ சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்று முக்கிய உரையாற்ற உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இதற்குப் பிறகு கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் பல முறை தமிழகம் வருவது NDAவின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்துள்ளது. DMK ஆட்சியின் ஊழல், மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியவில்லை என NDA தரப்பு விமர்சித்து வருகிறது. திருச்சி கூட்டம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!