பாமக நிர்வாகி சுட்டுக்கொலை! அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
பாமக நிர்வாகி சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக்கொலை என்று உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் சக்கரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தலையில் காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், கொலையா, விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வழக்கறிஞர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளதாக அன்புமணி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி, வழக்கறிஞராக உள்ள ஒருவருக்கே பாதுகாப்பற்ற நிலை தான் நிலவுகிறது என்பது வெட்ககேடானது என்றும் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதை பார்க்கும் போது நாம் பாதுகாப்பாக தான் வாழ்கிறோமா என்ற வினா எழுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை கலகலக்கப்போகும் தைலாபுரம்... அப்பா ராமதாஸ் ‘ராக்’... மகன் அன்புமணி ‘ஷாக்’...!
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ள அன்புமணி, கொலை, கொள்ளை குற்றங்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தீராத அப்பா - மகன் பிரச்சனை... அதிருப்தியில் அதிமுகவில் இணைந்த பாமக தொண்டர்கள்!