×
 

அதிமுகவுக்கு ஆதரவு இல்லை? தவெகவுடன் கை கோர்க்கும் பாமக… இடைத்தேர்தலில் புதிய திருப்பம்!

கடந்த காலங்களில் பாமக தரப்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிமுகவால் நிறைவேற்றப்படவில்லை என்றும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணிக்குள் பாமகவின் நிலைப்பாடு குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவை அக்கட்சி கோரி வருகிறது.

ஆனால், பாமக தலைவர் அன்புமணியை அதிமுக தரப்பினர் இதுவரை நேரில் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது குறித்து பாமக ஆலோசித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் பாமக தரப்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிமுகவால் நிறைவேற்றப்படவில்லை என்றும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் பாமக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தரப்பில் பாமகவுடன் போதிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்ற அதிருப்தி அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய சூழலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் பாமக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணக்கமான அரசியல் அணுகுமுறையை மேற்கொள்ள பாமக விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் பாமகவுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடைத்தேர்தல் தேவையற்றது என்ற நிலைப்பாட்டில் பாமக இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தேர்தலை புறக்கணிப்பது குறித்து அன்புமணி ராமதாஸ் தரப்பு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக நிர்வாகிகள் தன்னை சந்திக்க முயற்சிப்பதையும் அன்புமணி தவிர்த்து வருவதாக கூறப்படும் நிலையில், இறுதி முடிவு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: “அரசியல் பேசாதீங்க!” தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் போட்ட கண்டிஷன்... வைரலாகும் அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share