குருமூர்த்தியிடம் ஏன் பேசினேன்? ராமதாஸ் கட்டவிழ்க்கும் முடிச்சுகள்...
ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியுடன் என்ன பேசினேன் என்பது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தந்தை- மகன் பிரச்சனை எப்போது ஓயும் என பாமக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் ஒற்றுமையாக செயல்பட்டு வந்த ராமதாசும் அன்புமணியும், எலியும் பூனையுமாக அடித்துக் கொள்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்சி இரண்டாக உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் பாமக நிர்வாகிகள் உள்ளனர்.
இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்திருந்தாலும் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் பொறுப்பில் இருந்து நீக்குவதும், நீக்கப்பட்ட பொறுப்பாளர்களை தான் தலைவர் என்ற முறையில் சேர்ப்பதாக அன்புமணி அறிக்கை வெளியிடுவதும் நாம் பார்த்திருப்போம். இப்படியே போய்க் கொண்டிருக்க சமீபத்தில் ராமதாசும் அன்புமணியும் சந்தித்துள்ளனர். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி உள்ளிட்டோருடன் ராமதாஸ் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: ஏலேய் சமாதானம்-ல! ஜி.கே மணி சொன்ன குட் நியூஸ்.. தொண்டர்கள் குஷி..!
என்ன பேசி இருப்பார்கள், என்ன ஆலோசனைகளை வழங்கி இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுவரை சந்திப்பு தொடர்பான எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மூன்று நாள் பயணமாக தைலாபுரம் தோட்டத்திலிருந்து சென்னை புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தனக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளதாகவும், அவர் மீது மரியாதை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல சைதை துரைசாமியும் நீண்ட நாள் நட்பு எனக் கூறிய ராமதாஸ், இருவரையும் சந்தித்து பேசி உள்ளதாகவும், என்ன பேசினேன் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் எனவும் கூறினார். மேலும், வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் எனக்கூறி ராமதாஸ் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் அம்பலம்... பாமக-வை சாடிய திருமாவளவன்!!