×
 

அதிகார போதை.. கர்ப்பிணியை தாக்கிய கொடூர காவலர் அதிரடி கைது..!

பாலியல் புகார் அளிக்கச் சென்ற 5 மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கிய கனகம்மா சத்திரம் காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலைத்தில் ஜூன் 24 ஆம் தேதி, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களை காவலர் ஒருவர் கொடூரமாகத் தாக்கியதாக வெளியான காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண், செவந்தி, தனது புகாரைப் பதிவு செய்ய வந்தபோது காவலரின் மூர்க்கமான நடவடிக்கைக்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றது. பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இச்சம்பவத்தைக் கண்டித்து, காவல்துறையின் நடவடிக்கைகளை விமர்சித்தனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், குற்றஞ்சாட்டப்பட்ட காவலரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? காவலர்களை வஞ்சிக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கடும் சாடல்..!

இந்தச் சம்பவம், காவல் துறையின் பொறுப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தைத் தூண்டியது. இந்த நிலையில், கர்ப்பிணியை தாக்கிய காவலரை கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற நபர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பயங்கரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share