உச்சக்கட்ட பதற்றம்...!! - விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய செய்தி... மெரினாவில் போலீஸ் குவிப்பு...!
தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை.
இந்த சூழலில் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுநர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதிய ஆதரவு இல்லாததால் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக விஜய் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார். முதற்கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு கோரி தவெக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் குறுக்கே நிற்பது சரியல்ல..! விஜய் பதவியேற்பு விஷயத்தில் தலையிட்ட ஜோதிமணி..!
அந்த மூன்று கட்சிகளும் நாளை வரை தங்களது முடிவை அறிக்கப்போவதில்லை என்பதால், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே விஜய்க்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, மெட்டல் டிடெக்டர்கள், கான்வாய் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அகற்றப்பட்டது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்றும் விஜயை ஆட்சி அமைக்க விடாதது தவெக தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள், அரசு அலுவலகங்கள், தலைவர்களின் இல்லங்கள், பொது இடங்கள் மற்றும் உணர்வுபூர்வமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை தமிழக போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மெட்டல் டிடெக்டர்கள் பொருத்துதல், கூடுதல் போலீஸ் படைகள், சிசிடிவி கண்காணிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஆட்சி அமைக்க விஜய்க்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சோசியல் மீடியாக்களில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை மெரினா பீச்சில் யாரேனும் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்ற ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு காவல்துறை பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர் மேலும் தவெக தொண்டர்கள் அங்கு போராட்டம் நடத்துவார்கள் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்..! வன்முறை நிகழலாம்... உளவுத்துறை கடும் எச்சரிக்கை..!