×
 

இப்படியா செய்வது? கோர்ட்டில் குவிந்த திமுகவினர்... பதற்றம்... பரபரப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 90 பேர் நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் ஆஜராகினர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு பெண்கள், மாணவிகள் என பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். தற்போது அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்த நிலையில் 90 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: ஓசி பஸ் விமர்சனம்... பொன்முடியை வாண்டடாக வம்பிழுத்த நயினார் நாகேந்திரன்...!

பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 90 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திமுகவினர் 90 பேரும் பொள்ளாச்சி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜராகினர். 90 பேரும் ஒரே நேரத்தில் ஆஜரானதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பெண்களுக்கான விடியல் பயணம்; ஓசில தான போகப்போறீங்க.. சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share