×
 

பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!

கைத்தறித்துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பேசியிருப்பதாகவும், பொங்கல் பரிசில் வழங்கப்படும் வேட்டி, சேலைக்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை: 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் விஜய் ஆலோசித்து முடிவு செய்வார் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் சில ஆண்டுகளில் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது.

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அப்போதைய தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டு பொங்கலுக்கும் இதேபோல் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உங்கள் ரேஷன் கார்டு தகவல்கள் திருடப்படலாம்? தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த வார்னிங்!

இந்த நிலையில், கொடைக்கானலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணனிடம், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக தெரிவித்தார். பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், கைத்தறித்துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பேசியிருப்பதாகவும், பொங்கல் பரிசில் வழங்கப்படும் வேட்டி, சேலைக்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்களுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்பது குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்து ஆலோசித்து முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.

இதனால் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி ரொக்கத் தொகை வழங்கப்படும் என அரசு இறுதி அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகே ரொக்கப் பணம் தொடர்பான முடிவு வெளியாகும் என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share