×
 

தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!

திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல அவர்களை புறக்கணிக்கக்கூடாது  என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் வழியில் நின்று கையேந்தி கொண்டிருந்தவர்கள் இன்று அப்படி அல்ல பள்ளியில் ஆசிரியராக, பேராசிரியராக பணியாற்றுகிறார்கள், திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல அவர்களை புறக்கணிக்கக்கூடாது  என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் நகராட்சி திடலில் தேசிய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் மிஸ் திருநங்கை நிகழ்வு கலைநிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த 25 சாதனை திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டன. மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, கானா வினோத், நடிகை அர்ச்சனா உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி,  திருநங்கைகளை முன்பெல்லாம் அழைத்த விதம் வேறு அவர்களுக்கு திருநங்கைகள் என்ற பெயரை சூட்டியவரே கலைஞர் கருணாநிதிதான் எல்லோரும் சமம், எந்த ஏற்றத்தாழ்வுகள், வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்ற உணர்வோடுதான் திருநங்கைகள் என்று அழைத்தார். 
அவர்களுக்காக 2008-ல் ஒரு நலவாரியத்தையும் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி, முன்பெல்லாம் திருநங்கைகள் படிப்பதற்கு கூட அனுமதியில்லை. வழியில் நின்று கையேந்தி கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்கள், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்கள், கல்லூரியில் பி.எச்.டி. செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து படிப்பில் எந்தளவிற்கு ஆர்வம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்திலே இவர்களுக்கு படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலை. ஆனால் இன்று கல்லூரிகளிலே இவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதுதான் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுதான் திராவிட மாடல் ஆட்சி திருநங்கைகளுக்காக அடையாள அட்டை வழங்கியதுடன், சுய உதவிக்குழுக்கள்  அமைத்து வருமானம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு 50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருவதும் தி.மு.க. ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, இலவச தையல் எந்திரங்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச வீடுகள், உயர்கல்வி பயில உதவித்தொகை, அரசு கல்லூரிகளில் இடஒதுக்கீடு இப்படி ஏராளமான நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது என கூறினார்.

இதையும் படிங்க: 13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

தி.மு.க. அரசு 2025-ல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநங்கைகளுக்காக மாநில  கொள்கையை அறிவித்து அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி கொண்டிருப்பதாகவும், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை, மதுரையில் அவர்களுக்காக அரண் இல்லங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் திருநங்கைகள் நலவாரியத்தை சீரமைத்து அதன் அலுவல். சாரா உறுப்பினராக திருநங்கை ஒருவரை நியமித்தவர்தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுவரை நலவாரியத்தின் மூலமாக 9,080 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. 617 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல 1,599 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல எல்லோரும் மனிதர்கள்தான். அந்த உணர்வோடுதான் செயல்பட வேண்டும். அவர்களை புறக்கணிக்கக்கூடாது என்ற உணர்வோடுதான் இதுபோன்ற நிகழ்வுகளை திருநங்கைகள் இங்கே நடத்தி கொண்டிருப்பதாகவும் திருநங்கைகள் எப்பொழுதும்போல இன்னும் படித்து முன்னேற வேண்டும். கல்வியில் மட்டுமல்ல சுயதொழில் நடத்துவதில் மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் அவர்கள் வளர வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை... செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share