#BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!
ஆள்கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2002ஆம் ஆண்டு முதல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக ஜெகன் மூர்த்தி இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார்.
இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனை அடுத்து தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது.
இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!
இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!