×
 

பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு? 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை..!

ஆள் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி புரட்சி பாரதம். இது முக்கியமாக பட்டியல் சாதி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.1978இல் டாக்டர் அம்பேத்கர் மன்றமாக தொடங்கப்பட்டு, 1998இல் புரட்சி பாரதம் கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சியின் நிறுவனர் பூவை. எம். மூர்த்தி மாரடைப்பால் மறைந்த பிறகு, அவரது சகோதரர் ஜெகன் மூர்த்தி கட்சியின் தலைவரானார்.

ஜெகன் மூர்த்தி 2002ஆம் ஆண்டு முதல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார். இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!

இதனை அடுத்த தடவை முன்ஜாமின் வளர்க வேண்டும் என்று எம்எல்ஏ பூவை ஜகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார்.

வழக்கு விசாரணைக்கு சரி வர ஒத்துழைப்பு அளிக்காததால் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமின் நிராகரிக்கப்பட்டதால் தன்னை கைது செய்யக்கூடும் என எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாகியுள்ள பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share