×
 

ரகுமான் நிகழ்ச்சியால் ஒரே மன உளைச்சல்! ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாத நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2023 ஆக.12-ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு பின்னர் செப்டம்பர் 10ஆம் தேதி நடந்தது. இந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை காண முடியாததால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அர்ஜூன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இசைநிகழ்ச்சிக்கு ரூ.10,000க்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்றும் டிக்கெட் தொகையுடன் மனஉளைச்சலுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரி இருந்தார். இந்த நிலையில் ரூ.50,000 இழப்பீடு வழங்க குறைதீர் ஆணையம் ஆணை பிறப்பித்து உள்ளது.

இதையும் படிங்க: பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!

உரிய இழப்பீட்டை வழங்கிடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share